தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

Radhika SR Updated - April 04, 2020 at 08:19 PM.

விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கொரோனாவிற்கு மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியுள்ளார்.  இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆக உயர்ந்துள்ளது.

Published on April 4, 2020 14:46