ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கும் திட்டம் இல்லை

Our Bureau Updated - December 06, 2021 at 12:44 PM.

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கும் திட்டம் இல்லை

Customers stand 1 metre apart as a preventive measure against the novel coronavirus spread, while queuing up to buy essential items from a grocery store in Karad, Maharashtra. Photo: PTI

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால், உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. பேருந்து, ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.

ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 14-க்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

Translated by Radhika SR

Published on March 30, 2020 07:44